தமிழர் தலைவருக்கு தகைசால் தமிழர் விருது சி.பி.அய் (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, ஆக.3- திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு:

தமிழ்நாடு அரசின் உயரிய விருதான ‘தகைசால் தமிழர்’ விருது, இந்த ஆண்டு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

திராவிடர் கழக தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இளம் வயதி லேயே பொது வாழ்க்கை யில் அடியெடுத்து வைத்து தந்தை பெரியாரை பின்பற்றி தொடர்ந்து  பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருபவர். நாற்பது முறை சிறை வாசம், 60 ஆண்டுகள் இடைவிடாத பத்திரிகை பணி, ஓய்வில்லாத இயக் கப்பணி என்று இயங்கி வருகிறார்.  90 வயதிலும் சுறு, சுறுப்புடன் இயங்கி வருவதோடு, இந்திய நாட்டை அச்சுறுத்தி வரும் சனாதன மதவெறி சக்திகளை எதிர்த்து உறு தியாக களம் கண்டு வருகிறார். 

விருதுபெரும் திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு  சி.பி.அய். (எம்) மாநில செயற்குழு மனமார்ந்த வாழ்த்துக் களையும், பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத் தகைய சிறந்த பண்பாள ருக்கு இந்த விருதை அளிக்கவுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு சிபிஅய் (எம்) நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கோ. பால கிருஷ் ணன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *