கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.10.2024

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* “மக்கள் பிரச்சினைகளை தவிர்த்து விட்டு, நம்பிக்கை, புனிதம் என்று சொல்லி மோடி அரசு ஆட்சி நடத்த முடியாது” என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.

* சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை ஈஷா யோகா மய்யத்தில் காவல்துறையினர் அதிரடி ரெய்டு. காவல்துறையுடன் சமூக நலத்துறை, குழந்தைகள் நலக்குழு ஆகிய துறைகளின் அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். 4ஆம் தேதி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து குடிமக் களுக்கும் வழிகாட்டுதல்களை வகுப்போம்”. “யாராவது குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளி என்பதால் மட்டுமே இடிக்க முடியாது” என்று மீண்டும் வலியுறுத்திய நீதிமன்றம், “குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக” மேற்கொள்ளப்படும் இடிப்புகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை கோரிய மனுக்கள் மீதான தனது உத்தரவை ஒத்திவைத்தது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *