மதுரை தமுக்கம் மாநாட்டு மய்யத்தில் 28.09.2024 அன்று குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பாக ‘தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா-2024’ தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சவு.சங்கீதா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். மாநகராட்சி ஆணையாளர்ச. தினேஷ் குமார், புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், CII தலைவர் சிறீவத்ஸ் ராம், நபார்டு முதன்மை பொது மேலாளர் ஆர்.ஆனந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை தமுக்கம் மாநாட்டு மய்யத்தில் 28.09.2024 அன்று பலர் பங்கேற்றனர்.
Leave a comment