ஆண்டிபட்டி சீதாலட்சுமி மறைவு-விழிக்கொடை அளிப்பு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

போடிநாயக்கனூர், அக். 2– தேனி மாவட்ட அமைப்பாளர் ஆண்டிபட்டி கண்ணன். அவருடைய தாயார் சீதாலட் சுமி தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார்.

அவருடைய இரு கண்களும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவரது உடல் போடிநாயக்கனூர் பெரியார் சமத்துவம் எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இரங்கல் கூட்டம்

கழக காப்பாளர் ரெகு.நாகநாதன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர்கள் மாவட்டத் தலைவர் சுருளிராஜ், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் கூடலூர் ஜனார்த்தனன், கம்பம் மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் செந்தில், கம்பம் கே. கே. பட்டிதோழர்கள், தேனி நகர தோழர்கள், ஆண்டிபட்டி திமுக நகர செயலாளர், ஆதி தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர், தமிழ் புலிகள்அமைப்பு தோழர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் கண்ணன்அவர்கள் நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *