சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ஈஷா மய்யத்தில் காவல்துறை விசாரணை!

viduthalai
2 Min Read

சென்னை, அக்.2- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க காவல் துறை மற்றும் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மய்யத்தில் அதிரடி விசாரணை நடத் தினர்.

பேராசிரியர் காமராஜ் என்பவர் தனது மகள்கள் ஈஷா யோகா மய்யத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களை சந்திக்க ஈஷா மய்யம் அனுமதி மறுப்பதாக தெரிவித்து, ஆட் கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தன் மகள்கள் இருவரையும் ஈசா யோகா மய்யத்தில் துறவியாக மாற்றுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஈஷா யோகா மய்யத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடப்பதாக கூறிய அவர் அங்குள்ள மருத்துவர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் பல குற்ற வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளதாக மனு தாரர் மற்றும் அவரது வழக் குரைஞர் தெரிவித்ததை அடுத்து நீதிபதிகள் விரிவாக விசாரணை செய்தனர்.

ஈஷா மய்யத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்கள் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ள விரிவாக விசாரணை நடத்தப் பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

ஈஷா மய்யத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விவரங்களை, மனுதாரரும், கூடுதல் குற்றவியல் வழக்குரைஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விரி வான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஈஷா யோகா மய்யத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று (1.10.2024) அதிரடி விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ஈசா யோகா மய் யத்துக்கு எதிரான வழக் குகளை கைவிடும் வரை இளைய மகள் லதா சாகும் வரை பட்டினி இருப்ப தாக, மனுதாரர் ஆன காமராஜருக்கு கைப்பேசி வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *