மலேசிய திராவிடர் கழகத் தேசிய தலைவருக்குப் பாராட்டு

1 Min Read

பினாங்கு, அக்.1 மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் டத்தோ ச.த.அண்ணாமலை – டத்தின் கோ.அங்காய் அவர்களின் 55ஆவது மணமேடை நாள் பினாங்கு, பட்டவோர்த், படாவி அரங்கில் மலேசிய திராவிடர் கழக பினாங்கு மாநிலக் கிளை ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு மாநிலத் தலைவர் செ.குணாளன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் வாழ்த்துரை வழங்கினார். நீண்ட நெடிய கழக வரலாற்றில் 13ஆவது தலைவராக பல சவால்களை எதிர்கொண்டு சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்கியதிற்கு நன்றிகூறி பாராட்டி வாழ்த்தினார். பாகான் ஆஜாம் கிளைத் தலைவர் க.இராமன், கூலிம் கிளை துணைத் தலைவர் மு.மாரிமுத்து, பட்டவோர்த் கிளைத் தலைவர் இரா.ப.தங்கமணி, கெடா மாநிலத் தலைவர் மு.குமாரி அவர்களுடன் கலந்துக்கொண்ட சிறப்பாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கழக தேசிய உதவித் தலைவர் வீ.இளங்கோவன், உதவித் தலைவர் இரா.மனோகர், தேசியப் பொருளாளர் கு.கிருட்டிணன், தேசிய நிதிச் செயலாளர் இரா.காளிதாசன், தேசிய இளைஞர் செயலாளர் விக்கினேசுபாபு, மத்தியச் செயலவை உறுப்பினர் பெ.இராசேந்திரன், கெடா மாநிலத் தலைவர் மு.குமாரி, கெடா மாநிலச் செயலாளர் இளஞ்செல்வி, மற்றும் எண்ணற்ற கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துக்கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *