இலங்கை கடற்படையினர் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக! சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

viduthalai
1 Min Read

சென்னை, அக்.1– இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
இலங்கை கடற்படை யின் அட்டூழியங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவது கடும் கண்டனத் திற்குரியது.

தமிழ்நாட்டு மீனவர்க ளின் உயிருக்கும், உடைமை களுக்கும், தொழிலுக்கும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அச்சுறுத்தப் படுவது என்பது எதேச் சையாக நடக்கக் கூடியது அல்ல.

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கக் கூடிய செயலாகும். வேண்டு மென்றே திட்டமிட்டு தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை கடற்படை மட்டுமல்லாது கடற் கொள்ளையர்களும், தாக்கு தலை தொடர்கின்றனர்.

தமிழ்நாட்டு மீனவர் கள் மீது கொடிய தாக்குதல், வலைகளை சேதப்படுத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, மீனவர்களை சிறையில் அடைப்பது, சித்திரவதை செய்வது, மொட்டையடித்து அசிங்கப்படுத்துவது, கோடிக்கணக்கில் அப தாரம் விதிப்பது என்று வரம்பு மீறிய அனைத்து நடவடிக்கைகளையும், இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களையும், இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
இவைகள் தொடரும் நிலையில் ஒன்றிய அரசு இக்கடுமையான பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்க முன்வராமல் இருப்பது மிகுந்த கவலைக் குரியது.

தமிழ்நாட்டு மீனவர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஒன்றிய அரசு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை யும் விடுவிக்கவும், படகு களை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களிடம் ஒப் படைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற் கொண்டு, இலங்கை கடற்படையின் அட்டூ ழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமாய் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *