‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் – அக்டோபர் மூன்று வரை நீட்டிப்பு!

2 Min Read

சென்னை. அக். 1– முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரு வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள அய்அய்டி உட்பட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங் களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது.

அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்ட தாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும்.

அதன்படி 2025ஆம் ஆண்டுக் கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16ஆம் தேதிகளில் பாட வாரியாக காலை, மதியம் என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி அய்அய்டி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மய்யங்கள் 8 மண்டலங்களாகப் பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவ காசம் அக்டோபர் 3ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர் கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைதளத்தில் சென்று துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை தவறவிடுபவர் கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *