சென்னை, அக்.1– தமிழ்நாட்டில் அரசு நடு நிலைப் பள்ளி ஆசிரியா்கள் 55,478 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட வுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாறி வரும் கற்றல் -கற்பித்தல் முறைகளுக் கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக ளில் பணிபுரியும் ஆசிரியா் களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக டேப்லெட் கொள் முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு விநியோ கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி கடந்த கல்வியாண்டில்(2023-2024) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.101.48 கோடியில் கையடக்கக் கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப் பட்டன.
இதற்கு ஆசிரியா்கள் தரப்பில் பரவலாக நல் வரவேற்பு கிடைத்தது. தற்போதைய தொழில் நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மெரு கேற்றிக் கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணி களுக்கும் வழி செய் வதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் தொடா்ந்து 2- ஆவது கட்டமாக நிகழ் கல்வி யாண்டில் (2024-2025) அரசு நடுநிலைப் பள்ளி களில் பணிபுரியும் 55,478 ஆசிரியா்களுக்கு டேப் லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சாா்ந்த பணிகள் பாட நூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தச் செயல்பாடு களை துரிதமாக முடித்து ஆசிரியா்கள் பயன் பாட்டுக்கு விரைவில் கையடக்கக் கணினிகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.