ஆற்றல்மிகு அயன்சிங்கம்பட்டி தோழர்களின் அற்புதமான தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

Viduthalai
1 Min Read

அயன்சிங்கம்பட்டி, அக்.1– அயன் சிங்கம்பட்டி ஆலடி திடலில் 29.9.2024 அன்று கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார்

மாவட்டத்தலைவர் ச.இரா சேந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் தொடக்கவுரை யாற்றினார்.

அயன் சிங்கம்பட்டி தெட் சிணா.பூதப்பாண்டி அறிவா சான் தந்தை பெரியார் படத்தினை திறந்துவைத்து உரையாற்றினார்

தலைமைக்கழக அமைப்பாளர் மதுரை.வே.செல்வம் சிறப்புரை யாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.தமிழ்ச்செல்வம், திமுக கிளைச் செயலாளர் இ.குமார், தோழியர்கள் சாந்தி,சத்யா, மகாராஜா,சுனில் குமார் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

நிகழ்வில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலர் வெளியிடப்பட்டது. இளைஞர்கள் மகிழ்வோடு வாங்கி மகிழ்ந்தார்கள்.

நிறைவாக ஈட்டி கணேசனின் மந்திரமா-தந்திரமா நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் நடத்தினார் .மாவட்ட திராவிட மாணவர் கழக துணைத்தலைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.வீரபாண்டியகட்டபொம்மன் ,

வி.சி.க. சட்டநாதன் உள்ளிட்ட ஏராளமானர் பங்கேற்று சிறப்பித்தார்கள். பொறுப்பாளர்களுக்கு தெட்சிணா.பூதப்பாண்டி பயனாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

முன்னதாக மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் புடைசூழ எழுச்சியோடு நடத்திய தோழர்களை பாராட்டி நன்றி கூறி மகிழ்ந்தோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *