உரத்தநாடு, அக். 1– உரத்தநாடு சந்தை பேட்டையில் நகர கழக சார்பில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி கு.ரெங்கசாமி, ரெ.பாப்பம்மாள், பேபி ரெ.குமார் ஆகியோரின் நினைவு நாள் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் 26.09.2024 வியாழன் அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
நகர செயலாளர் பு.செந்தில்குமார் தலைமையேற்று உரையாற்றினார். நகர தலைவர் பேபி ரெ.இரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ. சுப்பிரமணியன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், உரத்தநாடு பேரூராட்சி மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட இணை செயலாளர் தி.வா.ஞானசிகாமணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல், ஆகியோர் வீர வணக்க உரை நிகழ்த்தினர்.
கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சுயமரியாதை சுடரொளிகளை நினைவு கூர்ந்து, கழக கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ நிகழ்வினை ஒருங்கிணைத்தார். இறுதியாக நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.
மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், வடக்கு ஒன்றிய துணை தலைவர் இரா.சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோ.இராமமூர்த்தி, வடக்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர் ரெ.சசிக்குமார், உரத்தநாடு நகர துணை தலைவர் மு.சக்திவேல், வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் இரா.இராஜதுரை, கண்ணந்தங்குடி கீழையூர் கிளை கழக செயலாளர் இரா.செந்தில்குமார், சடையார் கோவில் கிளை கழக தலைவர் குழந்தைவேல், இளைஞரணி தோழர் சடையார் கோவில் வெ.நா.பிரபாகரன் மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.