அரூர், அக். 1- அரூர் கழக மாவட்டம் வேப்பிலைப்பட்டி இளங்கோ – அனிதா ஆகி யோரின் மகன் இ.சமரசம் (மேனாள், மாவட்ட இளைஞரணி தலைவர்), அரூர் வட்டம் மொரப்பூர் சங்கர்- மாது ஆகியோரின் மகள் கவுரிசங்கரி வாழ்க்கை இணைப்பு விழா 25-9-2024 அன்று காலை 10 மணியளவில் வேப்பிலைப்பட்டி பெரியார் பெருந்தொண் டர் ஏ.மாரி -பேபி இல்லத் தில் புரட்சித் திருமணமாக நடைபெற்றது.
மணவிழா நிகழ்ச்சிக்கு முன்னதாக மணமகன் இ.சமரசம், மணமகள் ச.கவுரிசங்கரி ஆகியோர் இணைந்து கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் முன்னிலையில், கழகத் தோழர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்களுடன் அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கும், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் கொள்கை முழக்கமிட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மணவிழாவிற்கு மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில் மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளக் கழகத் தலைவர் சா. இராஜேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மாவட்ட செயலாளர் கு.தங்கராஜ், தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர் செந்தில், மணவீட்டார் சார்பில் கனகரத்தினம், ஆகியோர் முன்னிலை ஏற்று வாழ்த்துரை வழங்கினர். மணவிழாவை மாவட்ட கழக இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் ஒருங்கிணைத்தார்.
கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மணமக்களுக்கு உறுதி மொழியை கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். மணவிழாவில் எவ்விதமதச் சடங்கும், பெண் அடிமைச் சின்ன மான தாலியும் இல்லாமல், காதல் திருமணம் முழு சுயமரியாதை புரட்சித் திருமணமாக மாட்டுக்கறி விருந்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மணவிழாவினை நடத்தி வைத்த கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்துரையில், சமரசம்-கவுரிசங்கரி மணவிழாவானது தந்தை பெரியார் கொள்கையில் சற்றும் தடம் புரளாமல் புரட்சித் திருமணமாக நடைபெற்று இருக்கிறது. தாலியில்லா, சடங்கு இல்லா, காதல் திருமணம் என்று சுவரொட்டி ஒட்டியும், பதாகை வைத்தும் மணவிழா நடத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டு வாழ்த்தும், சமரசம் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவறாக இருக்கிறார். சிறுவயதில் இருந்தே கழகத்தில் இணைந்து, கழக மாவட்ட இளைஞர் அணி தலைவராக பணியாற்றி இருக்கிறார் . தமிழர் தலைவர் ஆசிரியர், துணைத் தலை வர் கவிஞர், பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆகியவர்களிடம் நேரடி தொடர்பில் உள்ளவர். சமரசம் சென்னை பெரியார் திடலில் தங்கி படித்து அரசுத் துறையில் பணியாற்றி வருகிறார் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியாரின் கொள்கையாகும்.மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கையில் தந்தை பெரியார் கொள்கையில் இறுதிவரை பயணித்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக வாழுங் கள். மணமக்கள் இருவரும் நன்கு படித்திருக்கிறார்கள் அவர்களுக்கு மேலும் மேலும் உறவினர்கள் துணை நிற்க வேண்டும் என கேட்டு வாழ்த்துரை வழங்கினார். தாலி இல்லா, சடங்கு இல்லா, காதல் திருமணம் என்று சுவரொட்டி ஒட்டியும் பதாகை வைத்தும் மணவிழாவை விளம்பரப்படுத்தியதால் மக்கள் மத்தியில் பரபரப் பாக பேசப்பட்டது.
வருகை தந்த அனை வருக்கும் தந்தை பெரியார் எழுதிய சுயமரியாதை திருமணம் ஏன்? என்று புத்தகத்தை வழங்கினர். அனைவருக்கும் சிறப்பு விருந்தாக மாட்டுக்கறி விருந்து அளிக்கப்பட்டது.
மணவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் கதிர் த.முருகம்மாள், மேனாள் மாவட்ட தலை வர் வீ.சிவாஜி, மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், கிருஷ்ணகிரி மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், கடத்தூர் நகர செயலாளர் இரா. நெடுமிடல், மேனாள் மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சொ. பாண்டியன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வ,நடராஜன், செயலாளர் கோ குபேந்திரன் கடத்தூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் மா. சரவணன், தருமபுரி வாசகர் வட்ட செயலாளர் ம. சுதா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர் பசுபதி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் மணி மேகலை, உமா, கல்பனா, சுடரொளி, இளைஞர் அணி மாணவர் கழக பொறுப்பாளர்கள் வினோத்குமார், அய்ய னார், சூர்யா, சாய்குமார், ஹரிஹரன், பிரதாப், தருமபுரி அர்ஜுனன், இராமச்சந்திரன் ஊர் தலைவர் மூ. கணேசன், அ.தமிழரசன், தீ.அமுல் செல்வம், சி.ஆசைத்தம்பி, மாரி ஆனந்தன், மாரி தங்கதுரை, மற்றும் தரும புரி கிருஷ்ணகிரி அரூர் மாவட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த னர். நிறைவாக மணமகன் இ சமரசம் நன்றி கூறினார்.