மீனவர் அமைப்புகளுக்கு அழைப்பு
இலங்கை அரசால் சிங்கள கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி வலைகளும் படகுகளும் சேதப்படுத்தப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள்.
தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவு மீட்புக்கு ஒன்றிய பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்ற கோரிக்கையோடும் இன்று (01.10.2024) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நாகப்பட்டினம் அவுரித் திடலில், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் பேரணி மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அழைப்பிதழ் துண்டறிக்கையை காரைக்கால் மாவட்ட கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்களிடமும் காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்களிடமும் நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. நாகதியாகராஜன் அவர்களிடமும் வழங்கினார்கள்.