தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

1 Min Read

மீனவர் அமைப்புகளுக்கு அழைப்பு

இலங்கை அரசால் சிங்கள கடற்படையால் தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி வலைகளும் படகுகளும் சேதப்படுத்தப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள்.

தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவு மீட்புக்கு ஒன்றிய பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்ற கோரிக்கையோடும் இன்று (01.10.2024) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நாகப்பட்டினம் அவுரித் திடலில், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் பேரணி மக்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அழைப்பிதழ் துண்டறிக்கையை காரைக்கால் மாவட்ட கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்களிடமும் காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்களிடமும் நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. நாகதியாகராஜன் அவர்களிடமும் வழங்கினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *