‘அகோரிகள்!’

1 Min Read

வாரணாசியில் அரிச்சந்திரா காட் என்ற பகுதியில் எரிந்த நிலையில் இருந்த உடலின் வெந்துபோன தொடைப் பாகத்தை சுவைத்துக் கொண்டே, உடன் யாரோ கொடுத்த வெளிநாட்டு மதுவைக் குடித்துக் கொண்டே, அதே தொடைப் பாகத்தால் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அகோரிச் சாமியார்கள் இவர்கள்!
அகோரி சாமியார்கள் என்றால் யார் தெரியுமா?

ஆடையில்லாமல் திரிந்து, மனித மாமிசத்தைத் தின்று, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவைப் புகைக்கக் கூடியவர்கள்!
ஆண்டு முழுவதும் எங்கோ அலைந்து திரிந்தோ, தனியாக இருந்தோ, அலகாபாத்தில் ‘கும்பமேளாவில் (பிரயாக்) ஒன்றாக சங்கமிப்பார்கள் (ஜனவரி 15 இல்).

பிணங்கள் எரிக்கப்படும் இடங்களில் ‘தியானம்‘ செய்து, அந்த உடல்களின் மாமிசத்தை உண்டு, உடலுறவும் வைத்துக் கொள்வார்கள். இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.

அகோரி என்றால், ‘பயமில்லாத‘ என்று பொருளாம். மனித மாமிசத்தை உண்பது – தங்களின் மலத்தை உண்பது எனக் கூறும் அவர்களின் ஆன்மிக வாழ்க்கை பல அபாயங்களை – ஆபாசங்களைக் கொண்டதாகும்.

ஆனால், இவற்றை எல்லாம் செய்தால், ஒரு மேம்பட்ட நிலையை அடைய முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாம். இதில் பெண் அகோரிகளும் உண்டு என்பது அடுத்து அதிர்ச்சியான செய்தி!

அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஆபாசமும் ஆராதிக்கப்படும் என்பதற்கு வேறு என்ன எடுத்துக் காட்டுத் தேவை? காட்டுமிராண்டி என்றால், தாண்டிக் குதிப்பவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?

– மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *