தமிழ்நாடு அமைச்சரவை: செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் பதவியேற்றனர்

1 Min Read

சென்னை, செப்.30- தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், பனை மரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் நேற்று (29.9.2024) பதவியேற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 29.9.2024 அன்று நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு அமைச்சர் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கீடு அமைச்சர் சா.மு.நாச ருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்தி ருந்தனர்.
சென்னை ஆளுநர் மாளி கையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *