பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவாசான் பிறந்த நாள் விழா!

1 Min Read

பெரம்பலூர், செப்.30 தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலை மையில் மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் முன்னிலையில் பெரம்பலூர் நகரில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதன் துவக்கமாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, பின்பு தந்தை பெரியார் அவர்க ளின் பட அணிவகுப்பு காந்தி சிலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்பு நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் இல்லத்தில் கொடி யேற்றி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று, தோழர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெரியார் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *