பவளவிழா ஆண்டின் தி.மு.க. முப்பெரும் விழா – தமிழர் தலைவர் பங்கேற்றுப் பேருரை!

1 Min Read

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில், “திராவிட நெடுந்தொடர்! தேசத்தின் ஒளிச்சுடர்!” என்ற தலைப்பில் பவளவிழா ஆண்டின் தி.மு.க. முப்பெரும் விழா 27.9.2024 அன்று மாலை அண்ணா நகர் மேற்கு பிரிவு, கோல்டன் பிளாட் எதிரில் சின்னசாமி திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் டி.எஸ்.பி.இராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், வழக்குரைஞர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் எம்.டி..ஆர்.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழா பேருரையாற்றினார். இனமுரசு சத்யராஜ், பேராசிரியர் அப்துல் காதர், மேயர் பிரியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தாயகம் கவி, அ.வெற்றியழகன், பிடி.சி.செல்வராஜ் ஆகியோரும் உரையாற்றினர். எம்.இ.சேகர் நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *