பவளவிழா ஆண்டின் தி.மு.க. முப்பெரும் விழா – தமிழர் தலைவர் பங்கேற்றுப் பேருரை!

viduthalai
1 Min Read

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில், “திராவிட நெடுந்தொடர்! தேசத்தின் ஒளிச்சுடர்!” என்ற தலைப்பில் பவளவிழா ஆண்டின் தி.மு.க. முப்பெரும் விழா 27.9.2024 அன்று மாலை அண்ணா நகர் மேற்கு பிரிவு, கோல்டன் பிளாட் எதிரில் சின்னசாமி திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் டி.எஸ்.பி.இராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், வழக்குரைஞர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் எம்.டி..ஆர்.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழா பேருரையாற்றினார். இனமுரசு சத்யராஜ், பேராசிரியர் அப்துல் காதர், மேயர் பிரியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தாயகம் கவி, அ.வெற்றியழகன், பிடி.சி.செல்வராஜ் ஆகியோரும் உரையாற்றினர். எம்.இ.சேகர் நன்றியுரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *