வெம்பக்கோட்டை அகழாய்வில் உடையாத முழுமையான மண் பாண்டங்கள் கண்டெடுப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

விருதுநகர், ஆக.4 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2.8.2023 அன்று தோண்டப்பட்ட குழியில் ஏராளமான பழங்கால மண் பாண்ட பொருட்கள் கிடைத்தன. அதில் சமையல் பாத்திரமாக பயன்படுத்திய மண் பாண்ட பொருள் மற்றும் அதனை மூடுவதற்காக பயன்படுத்திய மூடி ஆகியவை முழுமையாக கிடைத்துள்ளன. முதலாம் கட்ட அகழாய்வில் நிறைய மண்பாண்ட பொருட்கள் உடைந்த நிலையில் கிடைத்தன. ஆனால், தற்போது, முழுமையாக கிடைத்து வரு வது குறிப்பிடத்தக்கது. வடிதட்டு என அழைக்கப்படும் பொருளும், முற்காலத்தில் வீட்டின் தரையை சமப்படுத்த பயன்படுத்திய வித்தியாசமான கல் உள்ளிட்டவையும் கிடைத்து உள்ளன. இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். 

இதுவரை 2,970 பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *