வெம்பக்கோட்டை அகழாய்வில் உடையாத முழுமையான மண் பாண்டங்கள் கண்டெடுப்பு

1 Min Read

அரசியல்

விருதுநகர், ஆக.4 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2.8.2023 அன்று தோண்டப்பட்ட குழியில் ஏராளமான பழங்கால மண் பாண்ட பொருட்கள் கிடைத்தன. அதில் சமையல் பாத்திரமாக பயன்படுத்திய மண் பாண்ட பொருள் மற்றும் அதனை மூடுவதற்காக பயன்படுத்திய மூடி ஆகியவை முழுமையாக கிடைத்துள்ளன. முதலாம் கட்ட அகழாய்வில் நிறைய மண்பாண்ட பொருட்கள் உடைந்த நிலையில் கிடைத்தன. ஆனால், தற்போது, முழுமையாக கிடைத்து வரு வது குறிப்பிடத்தக்கது. வடிதட்டு என அழைக்கப்படும் பொருளும், முற்காலத்தில் வீட்டின் தரையை சமப்படுத்த பயன்படுத்திய வித்தியாசமான கல் உள்ளிட்டவையும் கிடைத்து உள்ளன. இன்னும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். 

இதுவரை 2,970 பொருட்கள் கண்டெ டுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *