புதுடில்லி, ஆக. 4 நாட்டில் 20 போலி பல்கலைக் கழகங்கள் இயங்கி வருவ தாக, பல்கலைக்கழக மானி யக்குழு (யு.ஜி.சி) அறிவித் துள்ளது. இங்கு அளிக்கப் படும் சான்றிதழ்கள் தகுதி யற்றவை எனவும் மாணவர்களுக்கு யு.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், டில்லியில் 8 பல்கலைக் கழகங்கள், உத்தர பிரதேசத்தில் 4 பல்கலைக் கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திராவில் தலா 2 பல்கலைக்கழகங்கள், கருநாடகம், மராட்டியம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக் கழகங்கள் போலியானவை என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.