வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஹிந்துத்துவ அமைப்பின் தலைவர் கைது

2 Min Read

புதுடில்லி, ஆக. 4  ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலை தளங்களில் பரப்புவோர் மீது அரியானா காவல்துறையினர் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், இந்துத்துவா அமைப்பான ‘பாரத மாதா வாகினி’ தலைவர் தினேஷ் பாரதி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

அரியானாவின் நூ பகுதியில் 31.7.2023 அன்று விசுவ இந்து பரிசத் அமைப்பினர் ‘ஷோபா யாத்ரா’ எனும் பெயரில் ஓர் ஆன்மிக ஊர்வலம் நடத்தினர். இதை இதர சமுதாய இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தி இருந்தனர்.இதில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக உருவெடுத்தது. இதில் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன. இக்கலவரம், அருகி லுள்ள குருகிராமுக்கும் பரவி அங் குள்ள மசூதிக்கு தீவைக்கப்பட்டது.

அம்மசூதியின் இளம் மவுலானா, 2 ஊர்காவல் படையினர், ஒரு மேனாள் பஜ்ரங்தளம் நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. 

இந்தக் கலவரம் அருகிலுள்ள பல்வல், ஃபரீதாபாத் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காஜியாபாத்தில் சில பகுதிகளிலும் பரவியது. இதை அணையவிடாமல் செய்ய பல சமூக விரோதிகள் ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலை தளங்களில் பரப்பி வருகின்றனர். இதன் மீது அரியானா காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது. இதுபோன்ற தவறானக் காட்சிப் பதிவுகளை சுமார் 50 ஃபேஸ்புக் கணக்குகளி லிருந்து பரப்பியது தெரியவந்துள் ளது. இந்த போலிக் கணக்குகளை நடத்தி வந்தவர்களில் ஒருவராக இந்துத்துவா அமைப்பான ஜெய் பாரத மாதா வாகினி எனும் அமைப்பின் தலைவரான தினேஷ் பாரதியை கைது செய்த காவல்துறையினர், அவரை ஃபரீதாபாத் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து ஃபரீதாபாத் நகரின் காவல் துறை ஆணையர் விகாஸ் அரோரா கூறும்போது, ‘கலவரத்துக்கு பிறகு செக்டர் 53 காவல் நிலையத்தில் ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகள் கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவாகின. இதில் செக்டர் 52-இல் வசிக்கும் தினேஷ் பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலரை தேடி வருகிறோம்’ எனத் தெரிவித்தார். இதுபோல், ஆத்திர மூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலை தளங்களில் தினேஷ் பரப்புவதும், பேசுவதும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அதை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *