துணை முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் சார்பில் வாழ்த்து!

1 Min Read

தி.மு.க. அரசின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராகி, அதில் குறுகிய காலத்திலேயே முத்திரை பதித்து சாதனைகளைச் செய்த மானமிகு மாண்புமிகு அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவார் என்று நமது ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்று.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும்.

இயக்கத்தில் அவர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகு, தி.மு.க.வில் இளைஞர்களிடையே கொள்கைப் பாசறை அமைத்து, திராவிட இயக்கத்தின் வேர்களை அறிந்து, புரிந்து கொள்ளும் விழுதுகளாக அவர்களைப் பக்குவப்படுத்தும் பயனுறு பாராட்டத்தக்க பணியை மேற்கொண்டார்!

அவரது தேர்தல் பிரச்சார கடும் உழைப்பு, இயக்க முதியவர்களைக் கனிவோடு அவர் பெருமைப்படுத்தல் போன்ற பல நல்ல பண்புகளால், அவர் நாளும் முதிர்ச்சிப் பெற்று வளர்ந்து கொண்டே உள்ளார்.

இளையர்கள் மட்டுமல்ல, முதியவர்களும், பொதுவானவர்களும் அவரது செயல் திறன் – ஆற்றல் கண்டு வியக்கின்றனர் – பொறாமைக்காரர்களைத் தவிர.

துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று, மேலும் மேலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சியை வளர்ப்பார் என்பது உறுதி!
தி.மு.க. என்ற பேரியக்கத்தினை நல்ல கொள்கை இயக்கமாகவே ஆக்கிடும் அடிப்படைப் பணி அவரது தனித்தன்மையாகட்டும்!
அவர் அடக்கத்துடன் பதவி ஏற்கும் முன் குறிப்பிட்டுள்ளபடி ‘தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர் கொள்கைகளின் வழியே செயல்பட்டு, கடமையாற்றுவேன்’ என்ற உறுதியே அவரை நாளும் மெருகேற்றும். அவரது புதிய பொறுப்பேற்பு ஆட்சிக்கும், கட்சிக்கும் புதிய திருப்பத்தைத் தரும் என்று நம்பி தாய்க்கழகமான திராவிடர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது.

அதுபோல இளையர்களுக்கு வாய்ப்பு என்ற அடிப்படையில் புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கும் நமது வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை

29.9.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *