தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் சோலையார்பேட்டையில் எழுச்சி!

Viduthalai
2 Min Read

சோலையார்பேட்டை, செப்.28- திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
சோலையார்பேட்டை இரயில் நிலையம் அருகில் காலை 9 மணிக்கு சி.தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைப்பில், கே.சி.எழிலரசன் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. எ.அகிலா மாநில மகளிரணி பொருளாளர் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், என்று அனைத்து அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பெ.கலை வாணன் மாவட்டச் செயலாளர் சமூகநீதி நாள் உறதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

திராவிடர் கழகம்

இவ்விழாவில் பங்கேற்ற தோழர்கள்: தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி.தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் ப.க., காளிதாஸ் நகர தலைவர், ஏ.டி.ஜி. சித்தார்த்தன் நகர செயலாளர், வ.புரட்சி மாவட்ட துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், எம்.கே.எஸ்.இளங்கோவன் மாவட்டச் துணை செயலாளர், பெ.ரா.கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா.நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர், தே.பழனிசாமி மாவட்ட செயலாளர் இளைஞரணி, ம.சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப.அஜித் மாவட்ட துணைச்செயலாளர் இளைஞரணி, கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா.பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், ம.கவிதா மாநில துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், த.சாந்தி மாவட்ட தலைவர் மகளிரணி, இ.வெண்ணிலாமாவட்ட செயலாளர் மகளிரணி, அ.விஜயா மாவட்ட அமைப்பாளர் மகளி ரணி, பாலாஜி மாவட்ட அமைப்பாளர் மாணவர் கழகம், வ.அன்பழகன் மாவட்ட துணைத் தலைவர் ப. நாத்திகன் மாவட்ட துணைச் செயலாளர் இரா.கற்பக வள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி.சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி.நவ நீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ. திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப. ஆசிரியரணி, அ. குமணன் மாவட்ட அமைப்பாளர் ப.ஆசிரி யரணி, ஜெ.ரவி. மாவட்ட அமைப்பாளர் ப.ஆசிரியரணி, ஆர்.பன்னீர் மாவட்ட செய லாளர் தொழிலாளரணி, கே.மோகன் மாவட்ட அமைப்பா ளர் தொழிலாளரணி எம்.ஞானபிரகாசம் மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம், குமரவேல் மாவட்டச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், பெருமாள்சாமி மாவட்ட துணைச்செயலாளர் விடுதலை வாசகர் வட்டம், ஆ.ப.செல்வராஜ் மாவட்ட துணை அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம், சிவக்குமார் நகரதலைவர் சோலை யார்பேட்டை,
ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலை யார்பேட்டை, லட்சுமணன் லக்கிநாயக்கன்பட்டி நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு.வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே.வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய செயலாளர், வே. அன்பு மாவட்ட செயலாளர் ப.க., எம்.என்.அன்பழகன் மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம் நா. சுப்புலட்சுமி மாவட்ட ப.க. எழுத்தாளர் மன்றம், எஸ்.சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளைஞரணி க.முருகன் நகர அமைப்பாளர், ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜசேகர் கிரி சமுத்திரம் கிளை தலைவர், கோ. சங்கர்சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி. சந்தோஷ் குமார் காக்கங்கரை ஒன்றிய தலைவர் க.மதியழகன் சோலை யார் பேட்டை நகர செயலாளர், ஆகியோர் பங்கேற்றனர்.
சி. தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் ப.க. நன்றி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *