கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

28.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை – பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி. முறையை சீரமைப்போம் – ராகுல் பேச்சு.
தி இந்து:
* விவசாயிகளின் போராட்டத்தின் போது பாஜகவுடன் நின்றதற்கு வருத்தப்படுகிறேன் – ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா பேட்டி.
* சுயமரியாதை இயக்கத்தின் தீயை அணையாமல் தொடர வேண்டும். இந்தியாவில் வளர்ந்து வரும் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் பிளவுபடுத்தும் சித்தாந்தங்களுடன், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பகுத்தறிவுக்கான போராட்டத்தை இயக்கம் முடுக்கிவிட வேண்டும் என கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரியானா தேர்தல் களத்தில், வாக்காளர்கள் – காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பசு வதை தடுப்பு பயணம் நடத்தும் சங்கராச்சாரியார் வரும் விமானத்தை எங்கள் மாநிலத்தில் தரையிறக்க அனுமதிக்கக் கூடாது – விமான நிலைய அதிகாரி களுக்கு மேகாலயா அரசு வேண்டுகோள்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *