போடி செ.சீதாலட்சுமி அம்மாள் மறைவு செ.கண்ணனிடம் கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல் தெரிவித்தார்

1 Min Read

தேனி மாவட்ட கழக அமைப் பாளர் ஆண்டிபட்டி செ.கண்ணனின் தாயார் செ.சீதாலட்சுமி அம்மாள் 25.9.2024 அன்று மாலை முதுமையால் இயற்கை எய்தினார். 26.9.2024 அன்று போடி பெரியார் சமத்துவ மின் மயானத்தில் எவ்வித மூடச்சடங்குகளுமின்றி தகனம் நடைபெற்றது.
தோழர் கண்ணன் சீரிய களப்பணியாளர் கழகம் எப்பணியைக் கொடுத்தாலும் அதை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையுணர்வு செய்து முடிக்கக்கூடிய மேலும் பணி நிமித்தமாக கோவில்பட்டியில் தங்கி இருந்தபோது அங்கு சில தோழர்களுக்கு இயக்கத்தை அடையாளம் காட்டி சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியவர்.

தற்போது தனது சொந்த ஊரான ஆண்டிபட்டியில் இருந்து கழகப் பணியாற்றி வருகிறார். அங்கு உள்ள அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்களுடனும், தோழர்களுடனும் நல்ல உறவுடன் இருந்து இயக்கப் பணி செய்து வரக்கூடிய தோழர் செ.கண்ணனின் தாயார் மறைவு தகவல் அறிந்ததும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செ.கண்ணன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் – ஆறுதலையும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *