போபால், செப்.28 மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு உஜ்ஜைனியில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலியாகினர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் நேற்று (27.9.2024) இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து உஜ்ஜையின் மாவட்ட குற்றவியல் நீதிபதி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மஹாகல் லோக் பகுதியின் கேட் எண் 4-க்கு அருகில் அமைந்துள்ள மஹராஜ்வாடா பள்ளியின் ஒரு பகுதி எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் இந்தச் சம்பவம் நடந்தது.
மஹாராஜ்வாடா பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் ஒரு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
ஆனால், கெட்ட வாய்ப்பாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலி யாகினர். 2 பெண்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மேனாள் முதல மைச்சர் கமல்நாத் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், “உஜ்ஜையினியில் உள்ள மகாகல் கோயிலின் கேட் எண் 4 அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.’’ என்றார்.