அக்டோபர்-1 நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீனவர் அமைப்பினருக்கு அழைப்பு

1 Min Read

நாகை, செப்.28 தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப் படுத்தும் இலங்கை அரசை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டன பேரணி, மாபெரும் ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டம் நடைபெறுகிறது
பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலியன்நாகை மாவட்டம் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடிமாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.க.ஜீவா ஆகியோர் நாகை அக்கரைப்பேட்டை கிராம மீனவ அமைப்பை சார்ந்த செல்வகுமார்,சக்திவேல்,ராஜப்பா,ஜெயராஜ், அக்கரைப்பேட்டை மீனவர் கிராம பஞ்சாயத்தார் இரா.சவுந்தரபாண்டியன், செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து மீனவர் சமுதாய மக்களை பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செய்து ஆர்ப்பாட்டத்தை வெற்றி யடைய செய்ய வேண்டுகோள் விடுத்தனர் நிச்சயமாக மீனவர் சமுதாய மக்கள் பங்கேற்பார்கள் என உறுதி அளித்தனர் (27.09.2024)

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *