நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை

1 Min Read

சென்னை, செப்.28 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 ஆண்டுகளில், சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கங்கைகொண்டான் சிப்காட் தொழில் மைய வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா சார்பில் டாடா டிபி சோலார் லிமிடெட் என்ற பெயரில் 313 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் பேனல் மற்றும் மாட்யூல் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *