கால்நடைமீது மோதியதால் தடம் புரண்ட ரயில் இது கேரளா

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், நவ 17 கேரள மாநிலம் பாலக்காடு அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

நிலாம்பூர் சாலை ஷோரனூர் விரைவு ரெயில் பாலக்காடு மாவட்டம் வல்லப்புழா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் இருந்த கால்நடைகள் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. பாலக்காடு ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின்படி, ரயில் தடம் புரண்டதில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த பயணிகள் குறித்து தகவல் ஏதும் வெளியிடவில்லை. விரைவு ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் வரக்கூடிய ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 3 ரயில்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது. ரயில் தடம் புரண்ட இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *