தெரிந்துகொள்வீர்! இன்பத்தமிழ்… இப்படியும் அப்படியும்!

2 Min Read

1. அந்தி, சந்தி:

அந்தி : மாலை நேரத்திற்கும், இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
சந்தி: இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

2. அக்குவேர், ஆணிவேர்

அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.
ஆணி வேர் : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. அரை, குறை

அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

4. அக்கம், பக்கம்

அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
பக்கம்: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. அலுப்பு, சலிப்பு

அலுப்பு: உடலில் உண்டாகும் வலி.
சலிப்பு: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.

6. ஆட்டம், பாட்டம்

ஆட்டம் : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.
பாட்டம் : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.

7. இசகு, பிசகு:

இசகு: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.
பிசகு: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

8. இடக்கு, முடக்கு

இடக்கு : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
முடக்கு : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.

9. ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்)
போட்டி : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.

10. ஒட்டு, உறவு

ஒட்டு : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
உறவு : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

11. கடை, கண்ணி

கடை: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.
கண்ணி : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.

12. கார – சாரம்

காரம் : உறைப்பு சுவையுள்ளது.
சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது.

13. காடு, கரை

காடு : மேட்டு நிலம் (முல்லை).
கரை : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).

14. ‘கா’வும் – ‘கழனி’யும்

கா : சோலை.
கழனி: வயல். (மருதம் ).

15. கிண்டலும் – கேலியும்

கிண்டல் : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.
கேலி : எள்ளி நகைப்பது.

– முகிலன், சென்னை – 14

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *