கடவுளைப் பற்றி யாருக்கு ஒன்றுமே தெரியாதோ, அவர்களுடைய வார்த்தையைக் கேட்டுத்தான் பிறகும் கடவுளை நம்புவதற்கு ஆரம்பிக்கிறார்கள் நமது வளர்ப்புத் தாய்கள்தான், நமது கடவுள் உபாத்தியாயர்கள். மனிதர்கள் ஓநாய், பிசாசு முதலியவைகளைப் பற்றிக் குழந்தைகளிடம் சொல்வது போலவே, கடவுளைப் பற்றியும் குழந்தைகளிடம் சொல்லுகிறார்கள்.
பச்சிளம் பிராயத்திலிருந்தே இயந் திரம் மாதிரி இரண்டு கைகளையும் தாங்களாகவே சேர்க்கும்படி சொல்லிக் கொடுக்கிறார்கள் அப்படிச் சொல்லிக் கொடுக்கும் வளர்ப்புத் தாய்களுக்கே கடவுளைப் பற்றி அக்குழந்தைக்குத் தெரிந்ததை விட சிறிதாவது விவரமாய்த் தெரியுமா?
கடவுள் என்பது ஒரு பரம்பரை வழக்கம்
ஒரு குடும்பத்தின் சொத்தும் அதன் பொறுப்பும் எப்படி ஒரு தகப்பனால் தன்னுடைய சந்ததியார்களுக்குக் கொடுக் கப்படுகிறதோ அதைப் போலவேதான் மதம் என்பதும் கொடுக்கப்படுகிறது.
கடவுள் என்பதை ஒருவர் மற்றொரு வருக்குச் சொல்லிக் கொடுக்காமலிருந்தால், உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்குக் கடவுள் என்றால் என்னவென்பதே தெரியாது.
ஒவ்வொருவனும் தனது முன் னோர்களிடமிருந்து எந்தக் கடவுள் என்பதைப் பற்றித் தெரிந்து கொண் டானோ அதையே தான் தனது சந்ததியார்களுக்கும் சொல்லுகிறான். ஆனால், அவனுடைய இஷ்டத்திற்குத் தக்கபடி ஒவ்வொருவனும் அந்தக் கடவுளைத் திருத்தியும். புதுப்பித்தும் அழகுபடுத்தியும் சொல்லுகிறான்.
மனிதனுடைய மூளையானது முக்கியமாய் இளம்பிராயத்தில்.ஒரு மிருதுவான மெழுகைப்போல், எந்த வழியிலும் திருப்பக் கூடியதாக இருக்கிறது. தானே யோசிக்கும் தன்மை வரக்கூடாத பருவத்தில், மனிதனுடைய அபிப்பிராயங்களையெல்லாம் உண்டு பண்ணுவது அவனுடைய கல்வியே யாகும்.
இதையுணராமல் சிறிய வயதில் சரி யாகவோ, தப்பாகவோ நமது மண்டைக்குள் புகுத்தப்பட்ட அபிப் பிராயங்களெல்லாம் நமது பிறப்பிலேயே இயற்கையாக ஏற்படும் உணர்ச்சி என்று தப்பாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
இந்த மனப்பான்மைதான் நமது பிழை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது.
அது பரவும் விதம்
யார் நமக்குப் போதிக்கிறார்களோ, அவர்களுடைய அபிப்பிராயங்களே நமக்குள் புகுத்தப்படுகின்றன. நம்மைவிட அவர்களை அதிக புத்திசாலிகள் என்றே நாம் நம்புகிறோம். நமக்குக் கற்பிக்கப்படும் விஷயங்களை அவர் கள் பூரணமாய் அறிந்து கொண்டு விட்டதாகவே நாம் நினைத்துக் கொள்ளுகிறோம். அதனால் அவர்கள் மீது அதிகமான நம்பிக்கை வைக்கிறோம்.
நமக்கு நாமே உதவி செய்து கொள்ள முடியாத பக்குவத்தில் அவர்கள் நம்மைப் பற்றிக் கவலையெடுத்து வந்ததனால் பிறகு நம்மை ஏமாற்றமாட்டார்கள் என்றே தீர்மானிக்கிறோம்.
இந்த எண்ணத்தினால்தான் ஆதர வில்லாத ஆயிரக்கணக்கான தவறு களைக் கண்மூடித்தனமாய்க் கையாள ஆரம்பிக்கிறோம். அவர்கள் சொல்வதைப் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாதென்று அவர்கள் சொல்லி யிருந்துங்கூட, அவர்கள் மீது நமக்கு நம்பிக்கை குறைவதில்லை. ஆனால். அதற்குமாறாக அவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு மரியாதை செய்கிறோம்.
– பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்க குருவின் மரண சாசனம் நூல்