மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

Viduthalai
5 Min Read

மதுரை, செப்.27 மதுரையில் பகுத்தறிவுப் பகலவன் தந்ைத பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
17.9.2024 அன்று காலை 10 மணிக்கு மதுரை தல்லாகுளம் பெரியார் சிலை முன்பு மதுரை மாநகர் மாவட்ட தோழர் கள் ஊர்வலமாக முழக்கங்களோடு திரளாகக்கூடி மாவட்ட காப்பாளர் தே.எடிசன்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்பகுதியில் செல்லும் அனைத்து மக்களுக்கும் தமிழக எண்ணெய்ப் பலகாரத்தின் இனிப்புகளை வழங்கி பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

10.30 மணிக்கு அங்கிருந்து மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமையில் மகிழுந்தில் முப்பதுக்கும் அதிகமான தோழர்கள் புதூர் பாக்கியம் ஏற்பாட்டில், பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் படம் அருகில் நின்று, பெரியார் கொள்கை முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களுக்கு நா.முருகேசன், பெரி.காளியப்பன் நல்ல தம்பி க.சிவா ஆகியோர் இனிப்பு வழங்கி னர்.
பெரியார் பிறந்த நாளுக்கு இனிப்பு வழங்குகிறோம் எனக்கூறி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விசிக மேனாள் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அன்பழகன் நிகழ்வில் கலந்து கொண்டார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் சுப.முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து அய்டிஅய் தாமரைத் தொட்டி சொக்கி குளம் வழியாக 10.40 மணிக்கு பிடிராஜன் சாலை பீபீ குளம் சந்திப்பில் பொதுமக்களுக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் வாழ்த்து முழக்கமிட்டு இ.அணி துணை தலைவர் அ.இராஜா, இளைஞரணி செயலாளர் காசி, மாரிமுத்து, குலசேகரன், முரளி ஆகியோர் இனிப்பு வழங்கினர். மாவட்ட கழக செயலாளர் பீபீ குளம் இரா.லீ.சுரேஷ் ஏற்பாட்டில் பெரியார் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

அருகில் உள்ள கழகக் கொடியினை ஒலி முழக்கங்களோடு மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் ஏற்றி வைத்தார்.
அனைவருக்கும் அழகுப் பாண்டி பா.சடகோபன், வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம் ஆகியோர் இனிப்பு வழங்கி உரையாற்றினார். தோழர், தோழியர்களுக்கு மாவட்ட செயலாளர் செல்வங்கள் திவ்யா, மகாமதி ஆகியோர் குளிர்பானங்களை மகிழ்வுடன் வழங்கினர்.
முனைவர் வா.நேரு பெரியாரின் சிந்த னைகளும் கருத்துகளும் அனைத்து மக்களுக்கும் தேவையான ஒன்று, அனைவருக்கும் கல்வி, பட்டம் பதவி கிடைக்க காரணமானவர் பெரியார் என உரையாற்றினார். அங்கிருந்து11மணிக்கு முல்லை நகர் மாவட்ட துணைத்தலைவர் இரா.திருப்பதி இல்லத்தில் தி.அஜிதா தலைமையில், மாவட்ட இளைஞர் அணி தலைவர் செல்வப் பெரியார் வாழ்த்து முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியினை ஏற்றிவைத்தார்.

திராவிடர் கழகம்

11.15 மணிக்கு மீனாட்சிபுரத்தில் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் சீனி அவர்கள் உணவு விடுதிக்கு அருகில் அலங்கரித்து வைக்கப் பட்ட பெரியார் படத்துக்கு அருகில், வாழ்த்து முழக்கங்களோடு தோழர்கள் சீனிவாசன், பெத்தானியாபுரம் பாண்டி, பெரியசாமி, பாக்கியலட்சுமி ஆகியோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
சீனி அவர்கள் மகன் ஜெயமூர்த்தி அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கினார். தனசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் வா.நேரு பேசும்போது, ஜப்பானில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டார்.
பெரியாருடைய கொள்கை என்பது மானுட நேயக்கொள்கை உலகில் எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அவற்றை முறியடித்து உரிமை பெற குரல்கொடுக்கும் கொள்கை தந்தை பெரியாருக்குச் சொந்தமானது எனக் கூறி முடித்தார்.
11.45 மணிக்கு பூமி உருண்டை வீதியில் வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தோழர் முத்து மசாலா உரிமையாளர் முத்து, இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை ஆகியோர் இனிப்புகள் வழங்கினர் மாவட்ட துணைத் தலைவர் இரா.திருப்பதி சிறப்பாக உரை யாற்றினார்.

முனைவர் வா.நேரு, மெய்யப்பன் ஆகியோர் உரையாற்றினர். 12 மணிக்குச் செல்லூர் 50 அடிரோட்டில் ந.இராஜேந்திரன் தலைமையில் வைக்கப்பட்ட பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து தலைவர் அ.முருகானந்தம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்
இரா.திருப்பதி பேசும்போது 92 வயதிலும் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளின் கண்துஞ்சாமல் கண்காணிக்கும் பணியால் தான் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார். நிறைவாக முனைவர் வா.நேரு உரையாற்றினார்.
அங்கிருந்து 12-30 மணிக்கு தோழர்கள் செல்லூர் காவல்நிலையம் அருகில் சிவன்தெரு முன்பாக ராஜ சேகர் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் படத்துக்கு அருகில் முழக்கமிட்டு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் கொடியேற்றி வைத்துமாவட்ட துணைத்தலைவர் பொ.பவுன்ராஜ் இனிப்பு வழங்கி உரை யாற்றினார் .
முனைவர் வா.நேரு உரையாற்றும் போது, தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரியார் கொள்கை உலக மயமாக்கப்படுகிறது எனக் கூறினார்.

செல்லூர் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் பெரியார் பிறந்த நாளை மாவட்ட துணை தலைவர் இரா.திருப்பதி சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
மதியம் ஒரு மணிக்கு தத்தனேரி. அருள்தாஸ் புரத்தில் மாவட்ட இளை ஞரணி துணை தலைவர் இராஜா தலைமையில் இரா.திருப்பதி கொடி யேற்றினார். மாவட்ட துணை தலைவர் தனுஷ்கோடி, மாணவர் கழகம் தேவராஜ் பாண்டியன் சோ.சுப்பையா ஆகியோர் இனிப்பு வழங்கினர். முனைவர் வா.நேரு நிறைவுரையாற்றினார்.
1-15 மணிக்கு சொக்கலிங்கநகரில் மறைந்த சோ.இராமூர்த்தி, தந்தை பெரி யார் படங்கள் அலங்கரிக்கப்பட்டு சோ.இராமூர்த்தி அவரின் துணைவியார் கழகக்கொடியினை முழக்கங்களோடு ஏற்றி வைத்தார். அனைத்து பொறுப்பா ளர்களுக்கும் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

1.30 மணிக்கு சோலையழகுபுரத்தில் மணிக்குமாவட்ட காப்பாளர் சே.முனியசாமி தலைமையில் கொடிஏற்றிவைக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முனைவர் வா.நேரு சிறப்புரையாற்றினார். பெரியார்செல்வன் நன்றி கூறினார்.
2 மணிக்கு மேல் அனுப்பானடி தீய ணைப்பு நிலையம் அருகில் பேக்கரி கண்ணன் தலைமையில் பொ.பவுன்ராஜ் முன்னிலையில் மக்களுக்கு கேக், இனிப்புகள் வழங்கி வா.நேரு கொடி யேற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயலாளர் சுப.முருகானந்தம் முனைவர் வா.நேரு சிறப்புரையாற்றினர். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வேல்துரைநன்றிகூறினார்.
2.30 மணிக்கு இஸ்மாயில்புரம் முனிச்சாலையில் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர் தலைமையில் வா.நேரு கொடியேற்றினார். மாவட்ட தலைவர் செயலாளர் இனிப்பு வழங்கி உரையாற்றினர். காலை 9 மணிக்கு புறப்பட்டபெரியார் பிறந்தநாள்பயணம் மதியம் 3 மணிக்கு வருகை தந்த தோழர்கள் அனைவருக்கும் விருந்தளித்தபின் நிறை வடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *