நாகை, செப். 27- நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21.09.2024 அன்று மாலை 6.00 மணியளவில் புத்தகரம் தந்தை பெரியார் படிப்ப கத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தலைமையில் எழுச்சி யோடு நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி வரவேற்று உரை யாற்றினார். இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வி.ஆர்.அறிவுமணி, ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.சண்முகம் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார்.
நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் உரையாற்றி னார்.
தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கருத்தரங்கங்களை நடத் துவது எனவும், உண்மை இதழுக்கு சந்தாக்களை திரட்டுவது எனவும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது எனவும், செப்.28 திருமருகலில் நடைபெற இருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் சமூக நீதி பேரணியை எழுச்சியோடு நடத்துவது எனவும், மாணவர் சந்திப்பு கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் நாகை நகர மாணவர் கழக அமைப்பாளர் ம.இளமாறன் அனைவருக்கும் நன்றி கூறினார்.