சிக்னலில் நின்ற ரயிலில் கொள்ளை இது குஜராத்

Viduthalai
1 Min Read

ஆனந்த், நவ 17 குஜராத்தின் கெடா மாவட்டத்தில் இந்தூர் நகரை நோக்கி காந்திதம்-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண் டிருந்தது. 

அந்த ரயில் அங்கதி கிராமத்திற்கு வெளியே கட ந்த 14-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் திடீ ரென சிக்னல் கோளாறால் நின்றது. இந்த இருட்டை பயன்படுத்திக் கொண்டு, ஜன்னலோரம் அமர்ந் திருந்த 5 பயணிகளை இலக்காக கொண்டு பைகள் மற்றும் பர்சுகள் உள்ளிட்டவற்றை திருடர்கள் கொள் ளையடித்து விட்டு, தப்பி விட்டனர். இதற்காக அவர்கள், ரயிலுக்குள் நுழையவில்லை. ஜன்னலோர பயணி களிடம் இருந்து கிடைத்தவற்றை பறித்து கொண்டு இருளில் தப்பி விட்டனர். 

அவர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். சிக்னல் கோளாறு என்பது கொள்ளையர்களின் திட்டத்தின் ஒரு பகுதியா? அல்லது தொழில்நுட்ப பாதிப்பா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 இந்த சம்பவத்தில் பணம், அலைபேசிகள் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.3.20 லட்சம் மதிப்பில் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *