சிக்னலில் நின்ற ரயிலில் கொள்ளை இது குஜராத்

1 Min Read

ஆனந்த், நவ 17 குஜராத்தின் கெடா மாவட்டத்தில் இந்தூர் நகரை நோக்கி காந்திதம்-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண் டிருந்தது. 

அந்த ரயில் அங்கதி கிராமத்திற்கு வெளியே கட ந்த 14-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் திடீ ரென சிக்னல் கோளாறால் நின்றது. இந்த இருட்டை பயன்படுத்திக் கொண்டு, ஜன்னலோரம் அமர்ந் திருந்த 5 பயணிகளை இலக்காக கொண்டு பைகள் மற்றும் பர்சுகள் உள்ளிட்டவற்றை திருடர்கள் கொள் ளையடித்து விட்டு, தப்பி விட்டனர். இதற்காக அவர்கள், ரயிலுக்குள் நுழையவில்லை. ஜன்னலோர பயணி களிடம் இருந்து கிடைத்தவற்றை பறித்து கொண்டு இருளில் தப்பி விட்டனர். 

அவர்களை பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். சிக்னல் கோளாறு என்பது கொள்ளையர்களின் திட்டத்தின் ஒரு பகுதியா? அல்லது தொழில்நுட்ப பாதிப்பா? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 இந்த சம்பவத்தில் பணம், அலைபேசிகள் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.3.20 லட்சம் மதிப்பில் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *