ராஜராஜ சோழன் கால நாணயம் கண்டுபிடிப்பு

1 Min Read

ராமநாதபுரம், செப்.27- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி யில் தொன்மை பாதுகாப்பு மன்றம் என்ற மாணவ அமைப்பு செயல்படுகிறது.

இதில் இணைந்துள்ள மாணவர்களுக்கு பழமை யான காசுகள், பானை ஓடு களை அடையாளம் காண வும், கல்வெட்டுகளை படிக்கவும் பயிற்சி வழங்கப் பட்டது. இந்நிலையில் அப் பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவிகளான மணிமேகலை, திவ்யதர்ஷினி, கனிஷ்காசிறீ ஆகியோர் வீட்டின்முன் மண்ணில் குழி தோண்டி விளையாடியபோது ஒரு பழைமையான காசு கிடைத்ததாக, மேற்கண்ட மன்றத்தின் செயலர் வே.ராஜகுருவிடம் கொடுத்தனர். இந்த பழைமையான காசு, அது கிடைத்தஇடம் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து வே.ராஜகுரு கூறுகையில், மாணவிகள் கண்டெடுத்தது. முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈழக்காசு ஆகும். முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன்பேரில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை. அக்காலத்தில் சோழர் ஆளுகையின் கீழிருந்த பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *