ராமநாதபுரம், செப்.27- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி யில் தொன்மை பாதுகாப்பு மன்றம் என்ற மாணவ அமைப்பு செயல்படுகிறது.
இதில் இணைந்துள்ள மாணவர்களுக்கு பழமை யான காசுகள், பானை ஓடு களை அடையாளம் காண வும், கல்வெட்டுகளை படிக்கவும் பயிற்சி வழங்கப் பட்டது. இந்நிலையில் அப் பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவிகளான மணிமேகலை, திவ்யதர்ஷினி, கனிஷ்காசிறீ ஆகியோர் வீட்டின்முன் மண்ணில் குழி தோண்டி விளையாடியபோது ஒரு பழைமையான காசு கிடைத்ததாக, மேற்கண்ட மன்றத்தின் செயலர் வே.ராஜகுருவிடம் கொடுத்தனர். இந்த பழைமையான காசு, அது கிடைத்தஇடம் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து வே.ராஜகுரு கூறுகையில், மாணவிகள் கண்டெடுத்தது. முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈழக்காசு ஆகும். முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன்பேரில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை. அக்காலத்தில் சோழர் ஆளுகையின் கீழிருந்த பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது என்றார்.