திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக .பொன்முடி சுற்றுப் பயணம்

2 Min Read

பேரன்புடையீர், வணக்கம். கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இளைஞரணி தோழர்களை சந்திக்கும் வகையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடுமாறு மாவட்ட கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தலைமைக் கழக அமைப்பாளர்கள் தகுந்த வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுப்பயண பட்டியல்
நாள் – நேரம் கூட்டம் நடைபெறும் இடம் மாவட்டம்
04.10.2024 வெள்ளி – மாலை 5 மணி நாகர்கோவில் கன்னியாகுமரி
05.10.2024 சனி – காலை 10மணி திருநெல்வேலி திருநெல்வேலி
05.10.2024 சனி – மாலை 5 மணி கீழப்பாவூர் தென்காசி
06.10.2024 ஞாயிறு – காலை 10மணி தூத்துக்குடி தூத்துக்குடி
06.10.2024 ஞாயிறு – மாலை 5மணி அருப்புக்கோட்டை விருதுநகர்
14.10.2024 ஞாயிறு – காலை 10மணி பொன்னேரி கும்மிடிப்பூண்டி
14.10.2024 ஞாயிறு – மாலை 5 மணி ஆவடி ஆவடி
18.10.2024 வெள்ளி – காலை 10மணி திண்டுக்கல் திண்டுக்கல்
18.10.2024 வெள்ளி – மாலை 5 மணி பழனி பழனி
19.10.2024 சனி – காலை 10மணி கணியூர் தாராபுரம்
19.10.2024 சனி – மாலை 5 மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி
20.10.2024 ஞாயிறு – காலை 10மணி சுந்தராபுரம் கோயமுத்தூர்
20.10.2024 ஞாயிறு – மாலை 5 மணி குட்டைபுதூர் மேட்டுப்பாளையம்
25.10.2024 வெள்ளி – மாலை 5மணி புதுச்சேரி புதுச்சேரி
26.10.2024 சனி – காலை 10மணி வேகாக்கொல்லை கடலூர்
26.10.2024 சனி – மாலை 5மணி சிதம்பரம் சிதம்பரம்
27.10.2024 ஞாயிறு – காலை 10மணி விருத்தாசலம் விருத்தாசலம்
27.10.2024 ஞாயிறு – மாலை 5மணி சேந்தநாடு விழுப்புரம்
குறிப்பு : மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் அவரவர் பொறுப்பு
மாவட்டங்களில் பங்கேற்பார்கள்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *