மதுரை அண்ணாநகர் எஸ்என்பி காலனி பகுதியில் வசித்து வரும் தோழர் செந்தில்குமாரின் தங்கை மகன் பரத் சென்னையில படித்து வருகிறார். குற்றாலம் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பயிற்சி மாணவர் கடந்த 22.09.24 இரவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவருக்கு கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்),
இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) தெரிவித்துக் கொண்டனர்.
– – – –
தேனி மாவட்ட கழக அமைப்பாளர் தோழர் ஆண்டிபட்டி செ.கண்ணனின் தாயார் சீதாலட்சுமி அம்மாள் நேற்று மாலை 5:45 மணி அளவில் ஆண்டிபட்டியில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இன்று 26.09.2024 காலை 10.00 மணி அளவில் போடிநாயக்கனூர் பெரியார் சமத்துவம் மின் மயானத்தில் நடைபெற்றது.