‘CHENNAI DECLARATION ON CASTE ANNIHILATION’(ஜாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்)

1 Min Read

சமூக நீதிப் போராளி மறைந்த பி. எஸ். கிருஷ்ணன் அய்.ஏ.எஸ் அவர்கள், சுதந்திர இந்தியாவில் பழங்குடி மக்களுக்கும் தலித் மக்களுக்கும் உருவாக்கப்பட்ட சட்டங்களையும், திட்டங்களையும் பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிற ‘CHENNAI DECLARATION ON CASTE ANNIHILATION’ (ஜாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்) எனும் புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு, லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் மேனாள் பேராசிரியர் சாரோன் அவர்களும், பழங்குடி மக்களுக்காக அருட்தந்தை ஸ்டான் சாமி ஆற்றிய பணிகளைப் பற்றி டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய ‘ஸ்டான் சாமி : பழங்குடி மக்களின் அறப்போராளி’ புத்தகத்தை அருட்தந்தை ஜான்குமார் அவர்களும் வழங்கினர். (உடன்: லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் மேனாள் பேராசிரியர் சாரோன், அருட்தந்தை ஜான்குமார், சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் த. நீதிராஜன், ஒளிப்பதிவாளர் ரான்சன். (சென்னை, 23.09.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *