சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் மறையவில்லை; நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றார்! கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை – தமிழர் தலைவர் பேட்டி

1 Min Read

சென்னை, செப்.26 சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் மறையவில்லை, நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு, இன்று (26.9.2024) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டி வருமாறு: இயல்பாகவே, பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் களத்திலே நிற்கக்கூடிய போராளியாவார். சமூகநீதிப் பிரச்சினை என்று வந்தால், எப்போதும் அவர் ஒரு போராளிதான். வாழ்நாள் போராளியாக இருந்து, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் உரிமையைப் பெற்றுத் தந்தார் என்றால், அவரை என்றைக்கும் சமூகநீதி வரலாறு மறக்காது; சமூகநீதி வரலாற்றிலே ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கியவர். அவர் மறையவில்லை, நம் நெஞ்சங்களிலே நிறைந்திருக்கின்றார், உணர்வுப்பூர்வமாக!

இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *