தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட போட்டிகளில் பெரியார் பள்ளி மாணவ – மாணவிகள் வெற்றி!

1 Min Read

ஜெயங்கொண்டம், செப்.25- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக் கான மாவட்ட போட்டிகள் 11.9.2024 அன்று மாவட்ட அரங்கம் அரியலூரில் இறகுப்பந்து மற்றும் சிலம்பம் போட்டிகள் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு நடைபெற்றது.

இதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் இறகுப் பந்து போட்டிகளில் பூஜாசிறீ இரண்டாம் இடம் பிடித்து பரிசுத் தொகை 2000 ரூபாய் பெற்றுக் கொண்டார்.
மற்றும் சிலம்பம் போட்டிகளில் தர்ஷினி இரண்டாம் இடம், பிடித்து பரிசுத் தொகை 2000, செல்வ பிரியா மூன்றாம் இடம் பிடித்து ஆயிரம் ரூபாயும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த சிலம்பம் பயிற்சியாளர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரஞ்சனி, ரவிசங்கர் ஆகியோருக்கு பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *