புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை

Viduthalai
3 Min Read

புதுச்சேரி, செப். 24- பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம், (நிகர் நிலை பல்கலைக் கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது.
15-9-2024 ஞாயிறு அன்று புதுவைத் தமிழ்ச் சங்கக் குளிரூட்டப்பட்ட அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கியது .
தமிழ்நாடு மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணை அமைப்பாளர் ஆடிட்டர் .கு. இரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் தலைமை தாங்கினார். மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன் முன்னிலையில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன், மாநிலத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினர்.
மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் நிகழ்ச்சியை நெறியாளுகைச் செய்தார்.

பயிற்சி வகுப்பில் முதலாவதாகப் பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் “சமூக நீதி வரலாறு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பயிற்சியாளர்களின் வினாக்களுக்கு விடை அளித்தார்.
தேநீர் இடை வேளையைத் தொடர்ந்து இரண்டாவது பயிற்சி வகுப்பினை கழகச் சொற்பொழிவாளர் முனைவர். காஞ்சி பா.கதிரவன் “பெரியாரின் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பயிற்சியாளர்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டது.
பேராசிரியர் முனைவர் க.எழிலன் “பெரியாரின் தமிழ்த் தொண்டு” என்ற தலைப்பில் மூன்றாவது பயிற்சி வகுப்பினை நடத்தி பிறகு வினாக்களுக்கு பதில் அளித்து பேசினார்.
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள் மற்றும் பார்வை யாளர்கள், அனைவருக்கும் நண்பகல் உணவு வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு நான்காவது பயிற்சி வகுப்பு திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை “பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்த னைகள்” என்ற தலைப்பில் பேசினார். பின்னர் வினாக்களுக்கு பதில் அளித்தார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு “அறிவியல் மனப்பான்மை வளர்ப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பயிற்சி வகுப்பில் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு இறுதியாக ஆறாவது பயிற்சி வகுப்பு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் “சமூக நீதியின் சவால்கள்” என்ற தலைப்பில் டிஜிட்டல் திரை மூலம் பதிவுகளை காட்சிப்படுத்தி உரை நிகழ்த்தினார் பயிலிகளின் வினாக்களுக்கு பதில் அளித்தார்.

பயிற்சி வகுப்பில் ஆண்கள் 8, பெண்கள் 16, மாணவ,மாணவியர்; 14 என 38 நபர்கள் பயிற்சி பெற்றனர். அனைவருக்கும் நிறைவு விழாவில் சான்றிதழும், கழகப் புத்தகங்களும் வழங்கப்பட்டது.
பயிற்சி வகுப்பு அனைத்திலும் கவனமாகக் கேட்டு இறுதியில் சிறப்பான வினாக்கள் தொடுத்தப் பின்வரும் பயிற்சியாளர்கள்
க.ஜெயந்தி, க.கிரிதரன், க.பொழில் அமுதன், பா.திலக்சாரதி, தே.திவ்யா ராமன், எழிலரசன், ஜே.வாசுகி, வீ.பார்த்த சாரதி, அமுதன் ஆகிய 9 நபர்கள் வெள்ளி நாணயம் பெற தேர்வுச் செய்யப்பட்டனர்.
“சுயமரியாதைச் சுடரொளி” புதுவை மு.ந.நடராசன் நினைவாக அவரின் மகன்கள் மு.ந.ந.பாஸ்கர், மு.ந.ந.நல்லய்யன் ஆகியோர் வெள்ளி நாணயங்கள் நன்கொடையாக வழங்கினர்.

மாலை 5.30 மணியளவில் நிறைவு விழா மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் தொடங்கியது. புதுச்சேரி காவல்துறை மேனாள் கண்காணிப்பாளர் வீர. பாலகிருட்டிணன், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்ற கழக அமைப் பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர், அனைத்து பயிற்சியாளர்களுக்கு சான்றிதழும், சிறப்பு வினாக்களை எழுப்பி அதற்கு விளக்கம் பெற்ற பயிற்சியாளர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கி சிறப்பித்தார்கள்

நிகழ்ச்சியில் திராவிடர் கழகக் காப்பாளர் இர. இராசு, மாவட்டச் செயலாளர். கி. அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் விலாசினிஇராசு, விடுதலை வாசகர் வட்டத் தலை வர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலா ளர். ஆ.சிவராசன், திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் கே.குமார், இளைஞரணித் தலைவர் தி.இராசா,பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மருத்துவர். கு.இராஜ்குமார், இரா. சத்தியராஜ், எழுத்தாளர் .புதுவை பிரபா, புதுச்சேரி நகர மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மு. ஆறுமுகம், எஸ்.கிருட்டிணசாமி, அண்ணா பேரவை. முனைவர் சிவ. இளங்கோ, திருவள்ளுவர் தொண்டர் சண்முகம், மணித் கோவிந்தராஜ், சமூக நீதிப் பேரவைத் தலைவர்.நவீன். தனராமன், தெ. தமிழ் நிலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
நிறைவாக பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மேலும் பயிற்சி வகுப்பிற்கு ஒத்துழைப்பு நல்கிய கழக முன்னணித் தோழர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *