செப்-17, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள், சமூக நீதி நாளினை முன்னிட்டு 18.09.2024 சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் தந்தை பெரியார் கொள்கை விளக்க துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் வே.அஜய், செந்தில்குமார், சஞ்சய், சேஷாத்திரி, முத்துகுமார், நாகஅர்ஜுன், வெங்கடேஷ்வரன், மணிகண்டன் ஆகியோர் மாணவர்களிடம் துண்டறிக்கையை வழங்கினர்.