தமிழ்நாட்டில் தொழில் தொடங்கப் போட்டி போடும் பெரிய நிறுவனங்கள்! ரூ.564 கோடியில் சென்னையில் கார் டயர் தொழிற்சாலை!

1 Min Read

சென்னை, செப். 24- சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் 564 கோடி ரூபாய் முதலீட்டில் மிச்செலின் இந்தியா பிரீமியம் கார் டயர் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.

இதன் மூலம் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கையின் மூலம் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்து வருகின்றன.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால், தொழில் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

தற்போது மிச்செலின் இந்தியா பிரீமியம், கார் டயர் தொழிற்சாலையை சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் 564 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவ உள்ளது.

நாட்டில் பிரீமியம் டயர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இத்தொழிற்சாலை நிறுவப்படுகிறது. பிரான்சை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய டயர் நிறுவனமான மிச்செலின், இந்தியாவில் அதன் அடுத்த கட்ட உற்பத்தி விரிவாக்கமாக சென்னையில் தொடங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள ‘மிக்செலின் இந்தியா’ நிறுவனத்தில் 2 ஆயிரத்து 800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சென்னையிலும் நிறுவப்படு வதன் மூலம் கூடுதலாக 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *