பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை அண்ணாமலை ஆசை நடக்காது

1 Min Read

அதிமுக முன்னணி தலைவர் பொன்னையன் கருத்து

அரசியல்

சென்னை, ஆக. 5 தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இட மில்லை என அதிமுகவின் மூத்த தலைவர் பொன் னையன் கருத்து தெரிவித் திருப்பது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.  

ஒரு பக்கம் அதிமுக கூட் டணியில் பாஜக இருக்கிறது என்று கூறிக் கொண்டாலும் இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் மோதி வருகின் றனர்  சமீபத்தில் பாஜகவை செல்லூர் ராஜு விமர்சனம் செய்ய, செல்லூர் ராஜு குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்தார். இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பாஜகவுக்கு தாழ்த்தப் பட்ட மக்கள் வாக்கு இல்லை – சிறுபான்மையினர் வாக்கு இல்லை – ஏழைகளின் வாக்கு இல்லை – விவசாயிகளின் வாக்கு இல்லை.  இதனால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.  அண்ணாமலை முயன்றால் ஆளுங் கட்சியாக பாஜக வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தான் மேற்கண்ட பதிலை பொன் னையன்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *