பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை அண்ணாமலை ஆசை நடக்காது

Viduthalai
1 Min Read

அதிமுக முன்னணி தலைவர் பொன்னையன் கருத்து

அரசியல்

சென்னை, ஆக. 5 தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இட மில்லை என அதிமுகவின் மூத்த தலைவர் பொன் னையன் கருத்து தெரிவித் திருப்பது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.  

ஒரு பக்கம் அதிமுக கூட் டணியில் பாஜக இருக்கிறது என்று கூறிக் கொண்டாலும் இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் மோதி வருகின் றனர்  சமீபத்தில் பாஜகவை செல்லூர் ராஜு விமர்சனம் செய்ய, செல்லூர் ராஜு குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்தார். இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பாஜகவுக்கு தாழ்த்தப் பட்ட மக்கள் வாக்கு இல்லை – சிறுபான்மையினர் வாக்கு இல்லை – ஏழைகளின் வாக்கு இல்லை – விவசாயிகளின் வாக்கு இல்லை.  இதனால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.  அண்ணாமலை முயன்றால் ஆளுங் கட்சியாக பாஜக வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தான் மேற்கண்ட பதிலை பொன் னையன்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *