சமூகநீதிப் போராளி பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவிற்கு இரங்கல்!

1 Min Read

பேராயர் எஸ்றா சற்குணம் தனது 86ஆம் வயதில் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் (22.9.2024) என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரான பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதித் தொடர்பான மாநாடுகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்பவர் ஆவார்.

கடைசி வரை சமூகநீதிப் போராளியாக வாழ்ந்த பெருமகனார் ஆவார். தொடர் ‘விடுதலை’ வாசகருமாவார். அவர் மறைவு சமூகநீதிக் களத்தில் குறிப்பிடத் தகுந்த பேரிழப்பாகும்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கு நம் வீரவணக்கம்! வீரவணக்கம்!!

சென்னை
22.9.2024

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *