பேராயர் எஸ்றா சற்குணம் தனது 86ஆம் வயதில் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் (22.9.2024) என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரான பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் திராவிடர் கழகம் நடத்தும் சமூகநீதித் தொடர்பான மாநாடுகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்பவர் ஆவார்.
கடைசி வரை சமூகநீதிப் போராளியாக வாழ்ந்த பெருமகனார் ஆவார். தொடர் ‘விடுதலை’ வாசகருமாவார். அவர் மறைவு சமூகநீதிக் களத்தில் குறிப்பிடத் தகுந்த பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களுக்கு நம் வீரவணக்கம்! வீரவணக்கம்!!
சென்னை
22.9.2024
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்