ஒரத்தநாடு, செப்.23 செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம், ஒரத்தநாடு நகர கழக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
காலை 10 மணி அளவில் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலை முன்பு ஒன்று கூடி வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராஜ் தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் இருசக்கர வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டு ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத்தில் அமைந்திருக்கும் 40க்கும் மேற்பட்ட கிளைக் கழகங்களில் கழகக் கொடிகளை ஏற்றி தந்தை பெரியா ரின் சிறப்புகளை முழக்கங்களாக பரவச் செய்தனர்.
பேரணியை தொடங்கி வைத்து தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி உரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக நகர துணை செயலாளர் கருப்பையன் பேக்கரம்பன்கோட்டை திமுக பொறுப்பாளர் மணியன், குலமங்கலம் திமுக பொறுப்பாளர் அண்ணாதுரை, சிபிஅய்எம் நகர செயலாளர் வசந்தகுமார், சிபிஎம் வெங்கடேசன், சிபிஎம் கண்டந் தன்குடி காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. ராஜவேல், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் தெற்கு நத்தம் அ.சுப்பிரமணியன் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.
மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் இரா.சுப்ரமணியன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோ.ராமமூர்த்தி, வடக்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர் ரெ.சசிகுமார், வடக்கு ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் ப.ராஜகோபால், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.ராமதாஸ் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு, வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் இரா.ராஜதுரை, வடக்கு ஒன்றிய மாணவர் கழக செயலாளர் க.செழி யன், நகர இளைஞரணி செயலாளர் மா. சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலையற்றனர்.
ஒரத்தநாடு நகரத்தில் அமைந்திருக்கும் கழக லட்சியக் கொடியினை கழகத் தோழர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று ஏற்றிவைத்த னர் அதனைத் தொடர்ந்து வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டலக்கோட்டை கிளை கழகத்தில் தொடங்கி அனைத்து கிளைக் கழகங்க ளுக்கும் பேரணி அணிவகுத்துச் சென்றது.
கழக கொடி ஏற்றிய இடங்களும் பொறுப்பாளர்களும்
ஒரத்தநாடு நகரம்
பெரியார் சிலை – நகர இளைஞரணி துணைத் தலைவர் கே.எஸ்.பி.சக்கரவர்த்தி
பேருந்து பணிமனை – நகர துணை செயலாளர் இராவணன்
தந்தை பெரியார் படிப்பகம் – வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு
கவின் மளிகை – பெரியார் சிலைக்கு மாலை – நகரச் செயலாளர் பு.செந்தில்குமார்
அண்ணா சிலை – மாவட்டச் செயலாளர் அருணகிரி
சுண்ணாம்புகார தெரு – நகர துணை தலைவர் மு.சக்திவேல்
வடக்கு தெரு – நகர இளைஞரணி செயலாளர் மா.சாக்ரடீஸ்
தேரடி – நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன்
சந்தைபேட்டை – ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் சசிக்குமார்
தெற்கு வாணியத் தெரு – மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே. இராஜவேல்
பேபி இல்லம் – நகரசெயலாளர் பு.செந்தில்குமார்
புதூர் பைபாஸ் – திருவோணம் ஒன்றிய செயலாளர் வீர.சிற்றரசு
வடக்கு ஒன்றிய கிளை கழகங்கள்
மண்டலக்கோட்டை அண்ணா சிலை – மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ. நாராயணசாமி
ஆயங்குடி – ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன்
சேதுராயன் குடிக்காடு – பெரியார் பெருந்தொண்டர் மா.இராசப்பன்
தெற்கு நத்தம் கடை தெரு – மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன்
தெற்கு நத்தம் மெயின் ரோடு – மருத்துவர் அதிசயா
வீரமுண்டார் குடிக்காடு – வடக்கு ஒன்றிய துணைத் செயலாளர் இரா.சுப்ரமணியன்
அரும்பலை – வடக்கு ஒன்றிய இளை ஞரணி தலைவர் நா.அன்பரசு
நடுவூர் நடுத்தெரு – வடக்கு ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் ராஜ கோபால்
நெல்லுப்பட்டு – ஒன்றிய செயலாளர் அ.சுப்ரமணியன்
பஞ்சநதிக்கோட்டை – ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல்
துறையுண்டார் கோட்டை – ஒன்றிய விவசாய அணி தலைவர் கோவி.இராம தாஸ்
சடையார்கோவில் வடக்கு – ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் இராஜதுரை
சடையார்கோவில் – மாணவர் கழகத் தோழர் சீமான்
மன்றாயன் குடிக்காடு – தெற்கு நத்தம் அன்பழகன்
குலமங்களம் – ஊரச்சி அப்பு
கண்ணை கிழக்கு – தெற்கு நத்தம் லெட்சுமணன்
கண்ணை கிழக்கு – பெரியார் பிஞ்சு அமுதினி
கண்ணை கிழக்கு படிப்பகம் – மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன்
கண்ணை கிழக்கு கண்டபிள்ளை தெரு – ஒரத்தநாடு சரவணன்
கண்ணை கிழக்கு பெரியார் சிலை – சடையார் கோவில் கிட்டு
எலந்தவெட்டி – இளைஞரணி தோழர் பெற்குநத்தம் வே.தமிழ்ச்செல்வன்
கண்ணை கிழக்கு வளைவு – மாணவர் கழக தோழர் நவீன்
கண்ணை மேற்கு – மாணவர் கழகத் தோழர் க.ஆதவன்
ஊரச்சி அருணகிரி இல்லம் – கண்ணந்தங்குடி கீழையூர் கிளை கழக செயலாளர் இரா.செந்தில்குமார்
ஊரச்சி மடம் – ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் க.செழியன்
ஊரச்சி – குலமங்களம் கணேசன்
காலை 11 மணிக்கு புறப்பட்ட இரு சக்கர வாகன பேரணி மாலை சரியாக 6 மணியளவில் ஒரத்தநாடு நகரத்தை வந்தடைந்தது.
ஒரத்தநாட்டில் தந்தை பெரியார்
பட ஊர்வலம்
மாலை சரியாக 6.30 மணி அளவில் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கழகத் தோழர்கள் ஒன்றிணைய அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரின் முழு உருவப்படத்துடன் மாபெரும் தந்தை பெரியார் பட ஊர்வலம் தொடங்கியது.
ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரே.ரவிச்சந்திரன் ஊர்வலத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி அமர்சிங் ஊர்வலத்தை தொடங்கி வைத்து உரை யாற்றினார்.
ஊரத்தநாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா வீரக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ர மணியன், மாவட்ட துணைச் செயலாளர் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார், திருவோணம் ஒன்றிய தலைவர் சாமி.அரசிளங்கோ, நகர இளைஞரணி துணைச் செயலாளர் அ.மாதவன், நகர துணை தலைவர் மு.சக்திவேல், நகர துணை செயலாளர் இரா.ராவணன், தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் முன்னிலைேயற்றனர்.
பேண்டு வாத்தியம் முழங்க, கழகத் தோழர்களின் ஒலி முழக்கங்களுடன், மாணவர் கழகப் பொறுப்பாளர்களின் சிலம்பாட்டம், அதைத் தொடர்ந்து கையிலே கழகக் கொடியுடன் கழகத் தோழர்களின் அணிவகுப்பு என ஊர்வலம் மிக நீண்ட தூரத்திற்கு ஒரத்தநாடு நகரை கடந்து, ஒரத்தநாடு பேருந்து நிலையம் பெரியார் படிப்பகம் எதிரில் நிறைவடைந்தது. கழக ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமை கழக பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
ஒரத்தநாடு நகர இளைஞரணி தலை வர் பொறியாளர் ச.பிரபாகரன் நன்றி உரையாற்றினார்.