தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

17.9.2024 அன்று தந்தை பெரியார் அவர்களின் 146-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் பெரியாரின் சிலைக்கு கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் வி.சாமுவேல், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் வைக்கம் கோட்டாட்சியர் தீபா கேபி, கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, வைக்கம் நகராட்சி தலைவர் பிரீத்தா ராஜேஷ், நகராட்சி உறுப்பினர் ராஜசேகரன், வைக்கம் வட்டாட்சியர் கோபகுமார், ஆகியோர் உள்ளனர்.

திராவிடர் கழகம்

செப். 17 அன்று திண்டுக்கல் பெரியார் சிலைக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் (சிபிஎம்)மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் தலைமை கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை, மாநகர செயலாளர் கருணாநிதி, மாணிக்கம், மயிலை.கிருஷ்ணன், ஜி.எச்.பாண்டி, முத்துப்பாண்டி, ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *