உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர் சொற்பொழிவு -3

1 Min Read

சென்னை, செப். 23- சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் 18.09.2024 அன்று பாவேந்தர் பாரதி தாசன் ஆய்விருக்கை சார்பில் தொடர் சொற்பொழிவு வரிசையில் 3ஆம் சொற் பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிறுவன முதுகலை மாணவி சி.கயல்விழி வரவேற்புரை வழங்கினார். நிறுவன இயக்குநர் (கூ.பொ.), கோபிநாத் ஸ்டாலின் தலைமையுரையாற்றினார். நிறுவன உதவிப் பேராசிரியரும் ஆய் விருக்கைப் பொறுப்பாளருமான முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் நோக்கவுரை யாற்றினார்.

திமுக, மாநிலச் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் “பாரதிதாசன் – வரலாற்றின் வழக்குரைஞர்” எனும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மாணவி மி.பிறைலின் டின்சியா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிட, நிறுவன மாணவர் வி.விஜய் நன்றியுரை ஆற்றினார். இவ்விழா வில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரி யர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *