முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான மட்டைப்பந்து போட்டிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் தேர்வு

1 Min Read

ஜெயங்கொண்டம், செப்.23- 2024-2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 18.09.2024 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது.

இதில் 17. 09. 2024 அன்று நடைபெற்ற மட்டைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று நான்காம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். இதில் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ராகுல், பத்தாம் வகுப்பைச் சேர்ந்த ஹரி நாராயணன் ஆகிய இருவரும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோர்களை பள்ளித் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *