ஜெயங்கொண்டம், செப்.23- 2024-2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 10.09.2024 முதல் 18.09.2024 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றது.
இதில் 17. 09. 2024 அன்று நடைபெற்ற மட்டைப்பந்து போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று நான்காம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். இதில் 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ராகுல், பத்தாம் வகுப்பைச் சேர்ந்த ஹரி நாராயணன் ஆகிய இருவரும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோர்களை பள்ளித் தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினார்.